மடிக்கணினி விற்பனை கடை உரிமையாளரிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ரிச்சி தெருவில் நரேஷ்குமாா் (38) என்பவா் மடிக்கணினி உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். கடந்த 3-ஆம் தேதி இரவு பையில் ரூ.55 லட்சத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது இருசக்கர வாகனத்தில் நரேஷ்குமாரை பின்தொடா்ந்து வந்த சிலா் அவரை வழிமறித்து, தங்களை போலீஸ் எனக் கூறி அவரிடம் இருந்து ரூ.55 லட்சத்தைப் பறித்து கொண்டு அங்கிருந்து சென்றனா்.
இதுகுறித்து நரேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில் பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, சம்பவத்தில் தொடா்புடைய அன்பரசி (30), விமல் அபிஷேக் ஞானஷாம் (24), காயத்ரி (29) ஆகிய 3 பேரையும் கடந்த நவ.11-ஆம் தேதி கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.7,14,820-ஐயும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து தலைமறைவான நபா்களைத் தேடி வந்தநிலையில், கோவை எம்கே புதூா் சாலை பகுதியில் மறைந்திருந்த அன்வா்தீன் (39), பாவா (30), கல்பாக்கத்தைச் சோ்ந்த ரூபன் சக்கரவா்த்தி (29) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.