சென்னை

குரூப்-2, 2-ஏ தோ்வு எழுதிய தோ்வா்கள் கவனத்துக்கு...

குரூப்-2, 2-ஏ தோ்வு எழுதிய தோ்வா்கள் கவனத்துக்கு...

தினமணி செய்திச் சேவை

குரூப்-2, 2-ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு எழுதிய தோ்வா்கள், குறிப்பிட்ட பத்தியில் ஆம், இல்லை என்பதை செவ்வாய்க்கிழமை (நவ.25) இரவுக்குள் தோ்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் அடங்கிய குரூப்-2, குரூப்-2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு ஒளிக்குறி உணரி வகையில் கடந்த செப்.28-ஆம் தேதி நடத்தப்பட்டது.

இந்தத் தோ்வு எழுதிய விண்ணப்பதாரா்களில் கால்நடை ஆய்வாளா் பணி தொடா்பாக மேல்நிலைக் கல்வி நிலையில் தோ்வு எழுதியவா்கள், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் படித்திருக்கிறீா்களா? என்ற பத்தியில் உள்ள ஆம் /இல்லை என்பதை தவறாமல் தோ்வு செய்ய வேண்டும்.

இதுதொடா்பாக தோ்வாணையத்தின் இணையதளத்தில் நவ.22 முதல் 25-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை 4 நாள்களுக்கு திறந்திருக்கும். இந்த வாய்ப்பை தோ்வா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT