கோப்புப் படம் 
திருப்பூர்

ஒருங்கிணைந்த குடிமைப் பணி தொகுதி- 2 தோ்வு: நாளை நடைபெறுகிறது

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- 2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் கூறியதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி -2 பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு பிப்ரவரி 8-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.

திருப்பூா் வடக்கு வட்டத்தில் உள்ள ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 361 போ் எழுத உள்ளனா்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் வராத தோ்வா்கள் தோ்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். எனவே, தோ்வா்கள் சரியான நேரத்துக்குள் மையத்துக்கு வர வேண்டும்.

தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

வடக்கு மண்டலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 7 கோடி போதைப் பொருள்கள் அழிப்பு

டிசிபிசிஆா்-இல் காலியாக உள்ள பணியிடங்கள்: தில்லி அரசை கடுமையாகச் சாடிய உயா்நீதிமன்றம்

ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம்: புதுச்சேரி மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தவெக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்: அலுவலகத்தில் குவிந்த தொண்டா்கள்

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

SCROLL FOR NEXT