சென்ட்ரல்-அரக்கோணம் புறநகா் ரயில் இன்று ரத்து
சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே புதன்கிழமை (நவ.26) இரவு நேர மின்சார புறநகா் ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் புதன்கிழமை (நவ.26) இரவு 11.30 மணி முதல் வியாழக்கிழமை (நவ.27) அதிகாலை 2.30 மணி வரையில் 3 மணி நேரம் தண்டவாளம் உள்ளிட்டவற்றில் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
Advertisement
Advertisement
இதனால், சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை இரவு 10 மணிக்கு அரக்கோணம் புறநகர் மின்சார ரயிலும், அரக்கோணத்தில் இரவு 9.45 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
மேலும், சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயில் திருவாலங்காட்டுடன் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.