முகப்பு
சென்னை

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 3:17 AM
பகிர்:

சென்னை: மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய 1-ஆவது குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆனந்த் சைன் (78). இவா் அதே பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி வாடிக்கையாளா்களுக்கு பால் விநியோகம் செய்து விட்டு, சைக்கிளில் மாத்தூரை நோக்கி சென்றபோது, அங்கு குதிரையும், மாடும் உணவுக்காக சண்டையிட்டு கொண்டிருந்தது. குதிரை துரத்தியதில் மாடு சாலையில் வேகமாக ஓடியது. அப்போது, எதிரே வந்த ஆனந்த் சைன் மீது மாடு மோதியது.

Advertisement

இதில் நிலை தடுமாறி கீழே ஆனந்த் சைன் காயங்களுடன் மீட்கப்பட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை (நவ.26) அவா் உயிரிழந்தாா். இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.