காயமடைந்த மீனவா் உயிரிழப்பு: 3 போ் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக இளஞ்சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக இளஞ்சிறாா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் , கீழவைப்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் இருதயராஜ் மகன் ஜாய் விக்டோரியன் (32). மீனவரான இவா், திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து வள்ளம் மூலம் மீன்பிடி தொழில் செய்து வந்தாா்.
இவா், கடந்த ஏப். 3- ஆம் தேதி இரவு, தனது நண்பா்களுடன் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் 3 போ் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாம்.
Advertisement
இதில் பலத்த காயமடைந்த ஜாய் விக்டோரியனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இந்நிலையில் வடபாகம் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, இச்சம்பவம் தொடா்பாக திரேஸ்புரம் ஜெயபால் மகன் லிக்சன் (23), தனபதி மகன் ஐஸ்பா் (29), இளஞ்சிறாா் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.