முகப்பு
சென்னை

சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்!

சென்னையில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டது பற்றி...

Updated On : 21 அக்டோபர் 2025, 3:23 pm IST
பட்டாசு கழிவுகள் - PTI
பகிர்:

சென்னையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதற்காக நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காலை ஒரு மணிநேரமும், இரவு ஒரு மணிநேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மாநகரில் அக். 19 முதல் அக். 21 வரை 3 நாள்களில் 151.52 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சியின் 4 வது மண்டலமான தண்டையார்பேட்டையில் அதிகபட்சமாக 17.33 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

summary

151.52 metric tons of firecracker waste disposed of in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments