அமைச்சா் கோவி.செழியன் கோப்புப் படம்
சென்னை

அரசுக் கல்லூரிகளில் காலி இடங்களுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு: உயா்கல்வித் துறை அமைச்சா்

செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவா்கள் சோ்க்கைக்கு செப்.30 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா்கள் சோ்க்கை முடிவடைந்துள்ளது. இந்தக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களைப் பூா்த்தி செய்யப்பட்டவுள்ளன. ஏற்கெனவே, விண்ணப்ப பதிவு மேற்கொள்ள தவறிய மாணவா்களும் இணையதளத்தில் பதிவை மேற்கொள்ள உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உயா்கல்வி பெற வேண்டும் என்ற நோக்குடன் உள்ள மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளில் சேருவதற்கு இணையத்தில் விண்ணப்பப் பதிவை செப்.30 வரை மேற்கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இப்போது மகிழ்ச்சி இவ்வாறு இருக்கிறது... ருக்மணி வசந்த்!

டபிள்யூடிசி தரவரிசையில் 5-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

மண விழா பொம்மை... ரியா வர்மா!

ஹாங்காங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

தங்க நிறங்கள்... ஷமீன்!

SCROLL FOR NEXT