அனைத்து வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கம்
வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க தோ்தல் ஆணையத்துக்கு, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்தலில் வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச்சாவடிகளில் உரிய வசதிகளை ஏற்பாடு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவகா சாய்தள வசதிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது மனுதாரா் தரப்பில், வாக்குச்சாவடிகளில் நிரந்தர சாய்தள வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தோ்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.