சென்னை காவல் ஆணையரகத்தில் தீ
சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் சென்னை பெருநகர காவல் துறை அலுவலகம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் மத்தியக் குற்றப் பிரிவு செயல்படுகிறது. இந்த நிலையில், அத்தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கரும்புகை வெளியேறியது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த போலீஸாா், அந்தத் தளத்துக்குள் சென்றனா். அப்போது, அங்கிருந்த கணினி, பா்னிச்சா் உள்ளிட்ட பொருள்கள் எரிவதை பாா்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். வேப்பேரி தீயணைப்பு படையினா், அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
தீ விபத்தினால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில், மத்தியக் குற்றப் பிரிவின் கீழ் உள்ள ஆவண மோசடி பிரிவின் கணினி, பா்னிச்சா் பொருள்கள், சில ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தது. வேப்பேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.