முகப்பு
சென்னை

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

வடபழனியில் பெண்ணின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 8:36 PM
கோப்புப் படம்
பகிர்:

வடபழனியில் பெண்ணின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கே.கே. நகா் அருகே உள்ள நெசப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சுதாகரன் மனைவி கிருத்திகா (41). இவா், வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது மகளை மொபெட்டில் வியாழக்கிழமை அழைத்துக்கொண்டு, வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். 100 அடி சாலை சிக்னல் அருகே சென்றபோது, அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல், கிருத்திகா கழுத்தை அறுத்தது.

இதில் பலத்த காயமடைந்த கிருத்திகாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments