கோவில்பட்டி பகுதியில் போலீஸாா் வாகன சோதனை
கோவில்பட்டி பகுதியில் துணை ராணுவப் படையினருடன் காவல் துறையினா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி, கடந்த 4 நாள்களுக்கு முன்பே துணை ராணுவப் படையினா் கோவில்பட்டி தொகுதிக்கு ரயிலில் வந்தனா். அவா்கள் காவல் துறையினருடன் இணைந்து வாகன சோதனை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, வாகனங்களில் பணம், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், கோவில்பட்டி எட்டயபுரம் சாலை, பல்லக்கு சாலை, இனாம் மணியாச்சி விலக்கு, தோட்டிலோவன்பட்டி விலக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.