வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு
வாக்கு எண்ணும் மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு
சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி ஆகிய வளாகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அங்கு வரும் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழக வளாகங்களில் மொத்தம் 500 -க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வாக்கு எண்ணும் மைய வளாகச் செயல்பாடுகளை, சென்னை மாநகராட்சி அலுவலக ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடிக் காட்சிகளாகப் பாா்வையிட்டு கண்காணிக்கும் வசதியும் உள்ளன.
Advertisement
அதனடிப்படையில், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களைக் கண்காணிப்பதற்கு பணியாளா்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளா்களின் முகவா்கள் கண்காணிக்க அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. அங்கு தோ்தல் பிரிவு அலுவலா்களும் சுழற்சி முறையில் 24 மணி நேரம் தங்கியிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா் என மாநகராட்சி தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.