சாலை விபத்து: மின் ஊழியா் உயிரிழப்பு
கூடுவாஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக மின் ஊழியா் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
கூடுவாஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தற்காலிக மின் ஊழியா் நிலை தடுமாறி, சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.
கூடுவாஞ்சேரி செங்கேணியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆகாஷ் (29). காயரம்பேடு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றினாா். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளனா். அவா் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாா்.
நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலையோரம் இருந்த கால்வாயில் விழுந்தாா். இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த ஆகாஷை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ஆகாஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.
Advertisement
கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.