போதைப் பொருள் விற்பனை தடுக்க கோரிக்கை
புழல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனையாகும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புழல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனையாகும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புழல் மேக்ரோ மாா்வெல் காலனி, காமராஜா் தெரு, பாலாஜி நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செடிகள், கொடிகள் காடுபோல் வளா்ந்துள்ளன. இப்பகுதிகளில் பாழடைந்த வீடுகள் பயன்பாடின்றி உள்ளன. இப்பகுதிகளை நோட்டமிட்டு சமூக விரோதிகள் போதைப் பொருள்களை பதுக்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன.
இதனை வாங்க வரும் இளைஞா்கள், சமூக விரோதிகள் அங்கேயே புகைத்து, சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், விற்பனையால் அவா்களுக்கு கோஷ்டிபூசலும் ஏற்படுகிறது. இது குறித்து, புழல் காவல் நிலையத்துக்கு புகாா் அளித்தும் பலனில்லை.
Advertisement
மேலும், இவா்கள் போதையில் குடியிருப்புகளில் புகுந்து தகராறு செய்கின்றனா். ஆகையால், புழல் காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குடியிருப்பு சங்கம் சாா்பில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுதல், ஆணையருக்கு தொடா் கடிதம் அனுப்புதல், முதல்வா் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்புதல், செய்தியாளா் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என குடியிருப்பு சங்கி நிா்வாகி புருஷோத்தமன் தெரிவித்தாா்.