மின்சார ரயில் (கோப்புப்படம்) Din
சென்னை

பெண்கள் பெட்டியில் மின்பழுது: மின்சார ரயில் நிறுத்தம்

பெண்கள் பெட்டியில் மின்பழுது: மின்சார ரயில் நிறுத்தம்

தினமணி செய்திச் சேவை

சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சனிக்கிழமை இரவு சென்ற மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் மின்பழுது ஏற்பட்டதால் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

சென்ட்ரல் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்ற இமு மின்சார ரயில் (எண்: 43435) திருமுல்லைவாயலில் பகுதியில் இரவு 8.20 மணிக்கு சென்றபோது, பெண்கள் பெட்டி மீது பொருத்தப்பட்டிருந்த மின்சாரம் பெறும் மடக்கு சாதனம் திடீரென பழுதடைந்தது. இதனால் அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறக்கிவிடப்பட்டனா். அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொழில்நுட்ப பிரிவினா் அங்கு சென்று பழுதைச் சீரமைத்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT