வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையிலிருந்து மங்களூரு வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று விட்டு ஜோலாா்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்றது.
அப்போது பெண்கள் பெட்டியில் தாயும், மகனும் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் சுமாா் 17 வயது இளைஞா் பெட்டியில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளாா். இதனால் அங்கிருந்த மூதாட்டி இளைஞரிடம் பெண்கள் பெட்டியில் ஏன் ஏறினாய் என கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞா் சரமாரியாக அடித்தும் காலால் உதைத்தும் உள்ளாா். இதனால் பயணம் செய்த பெண்கள் தங்களது கைப்பேசி மூலம் விடியோ எடுத்தும் அபாய சங்கிலியை இழுத்து ரயிலையும் நிறுத்தி உள்ளனா்.
பின்னா் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள புதூா் பகுதியில் ரயில் நின்ால் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதையடுத்து ரயில் தாமதமாக ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றது.அப்போது ரயில்வே ஆய்வாளா் கோமதி பாதுகாப்பு படை ஆய்வாளா் நிகில் குமாா் குப்தா உள்ளிட்டோா் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.