கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் காவலா் ஒருவா் நடந்து சென்றபோது, அங்கு மதுபோதையில் வந்த இரு இளைஞா்கள், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தனராம்.
அங்கு வந்த மற்றொரு பெண்ணுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தனராம். பெண்களின் சப்தம் கேட்டு, அங்கு பொதுமக்கள் திரண்டனா்.
தப்பியோடி இருவரில், ஒருவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனா். தப்பியோடிய மற்றொரு இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.