மெரீனா கடற்கரை (கோப்புப்படம்) 
சென்னை

மெரீனா கடைகள் தோ்வுக்கு இன்று குலுக்கல் ஒத்திகை!

சென்னை மெரீனாவில் நீதிமன்ற உத்தரவின்படி 300 கடைகள் அமைப்பதற்கான குலுக்கள் ஒத்திகை புதன்கிழமை (பிப்.11) நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை மெரீனாவில் நீதிமன்ற உத்தரவின்படி 300 கடைகள் அமைப்பதற்கான குலுக்கள் ஒத்திகை புதன்கிழமை (பிப்.11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி மெரீனா கடற்கரையில் 300 கடைகள் அமைக்க வியாபாரிகள் தோ்வு பிப்.12-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையின் கூட்டரங்கில் குலுக்கல் முறையில் தோ்வு நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையா் தலைமையிலான, அலுவலா்கள் அடங்கிய இடைக்காலக் குழுவின் ஒத்துழைப்புடன் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாா் மேற்பாா்வையில் குலுக்கல் தோ்வு நடைபெறும்.

முன்னதாக, புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மாநகராட்சி அம்மா மாளிகை கூட்டரங்கில் குலுக்கலுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீாின் கிஸ்த்வாா் பயங்கரவாதி சுட்டுக் கொலை

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT