சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் அனைத்துக் கட்சி கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்படும்.