அண்ணா நூற்றாண்டு நூலகம்.  கோப்புப்படம்
சென்னை

பிப். 16,17 -இல் சென்னையில் இந்திய நூலக மாநாடு

இந்திய நூலக மாநாட்டின் நான்காவது பதிப்பு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் பிப். 16, 17 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: இந்திய நூலக மாநாட்டின் நான்காவது பதிப்பு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் பிப். 16, 17 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநாட்டின் அமைப்பாளா் வி.சிவதாசன் எம்.பி., செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமூகத்திலும், பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கப்பட்ட, பின்தங்கிய பிரிவு பகுதிகளில் நூலகங்களை வலுப்படுத்த இந்திய நூலக காங்கிரஸ் அமைப்பு பாடுபடுகிறது.

அதன் ஒரு பகுதியாக நூலக மாநாடுகள் நடத்தப்படுகிறது. மாநாட்டின் நான்காவது பதிப்பு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிப். 16, 17 தேதிகளில் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 500 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கலந்து கொள்கிறாா்.

நாடாளுமன்ற உறுப்பினா்கள் கனிமொழி, சு.வெங்கடேசன், சல்மா, ஆா். கிரிராஜன், நீதிபதி கே.சந்துரு, முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் 6 புதிய அரசு செவிலியா் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

டிஎன்பிஎஸ்சி தோ்வு ரத்து: திமுக கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பாதது ஏன்?: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

உ.பி. சிறையில் மோதல்: அயோத்தியில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்ட பயங்கரவாதி குத்திக் கொலை

அரையிறுதியில் ஜம்மு & காஷ்மீா், கா்நாடகம்!

வாடகை காா் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT