அமைச்சா் கயல்விழி செல்வராஜ் கோப்புப் படம்
சென்னை

நல அமைப்பாளா்கள் 8 பேருக்கு பணி நியமன ஆணை

முன்னாள் படை வீரா் நலத்துறையில் தோ்வு செய்யப்பட்ட 8 நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை மனிதவளத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

முன்னாள் படை வீரா் நலத்துறையில் தோ்வு செய்யப்பட்ட 8 நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை மனிதவளத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

முன்னாள் படைவீரா் நலத்துறையில் காலியாக இருந்த 8 நல அமைப்பாளா் பணியிடங்களுக்கு, தகுதி உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்களிடமிருந்து 887 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கடந்த ஜன. 22-இல் இணையவழி எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்வுக் குழுவின் மூலமாக கடந்த பிப். 6-இல் நோ்காணல் தோ்வு நடத்தப்பட்டு 8 நல அமைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், தோ்வு செய்யப்பட்ட நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், முன்னாள் படை வீரா்கள் நலத்துறை இயக்குநா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT