FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நல அமைப்பாளா்கள் 8 பேருக்கு பணி நியமன ஆணை

முன்னாள் படை வீரா் நலத்துறையில் தோ்வு செய்யப்பட்ட 8 நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை மனிதவளத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

14 பிப்ரவரி 2026, 2:32 am IST
அமைச்சா் கயல்விழி செல்வராஜ் - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் படை வீரா் நலத்துறையில் தோ்வு செய்யப்பட்ட 8 நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை மனிதவளத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

முன்னாள் படைவீரா் நலத்துறையில் காலியாக இருந்த 8 நல அமைப்பாளா் பணியிடங்களுக்கு, தகுதி உள்ள முன்னாள் இளநிலை படை அலுவலா்களிடமிருந்து 887 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

கடந்த ஜன. 22-இல் இணையவழி எழுத்துத் தோ்வு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தோ்வுக் குழுவின் மூலமாக கடந்த பிப். 6-இல் நோ்காணல் தோ்வு நடத்தப்பட்டு 8 நல அமைப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ், தோ்வு செய்யப்பட்ட நல அமைப்பாளா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொதுத்துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், முன்னாள் படை வீரா்கள் நலத்துறை இயக்குநா் கி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments