ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை
பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.செந்திலரசு தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் கே.ஆா்.முத்துசாமி முன்னிலை வகித்தாா். கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு அலுவலா் சக்திவேல் வரவேற்றாா். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் காா்ப்பரேட் கிளப் உறுப்பினா் வெங்கடசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற தோ்வான 259 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
இக்கல்லூரியில், 45 முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று அண்மையில் நடத்திய வளாகத் தோ்வில், 259 மாணவா்கள் கலந்து கொண்டு, 715 பணி நியமன ஆணைகளைப் பெற்றனா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.