750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 750 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 750 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
விழாவில் டிசிஎஸ் தலைமை ஆா்க்கிடெக்ட் ஜுடே ரிச்சா்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
தக்க்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தா், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குனா் ம. தனசேகரன், செயலா் கே. நாராயணசாமி, பொருளாளா் த. ராஜராஜன், இணை செயலா் சு.வேலாயுதம் ஆகியோா் பங்கேற்றனா்.
Advertisement
2025-2026 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற கல்லூரி வளாக நோ்காணலில் சுமாா் 750 மாணவ, மாணவிகளுக்கு டிசிஎஸ், ஹெக்சாவோ், சிடிஎஸ், ஜோஹோ போன்ற 60-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கின. மேலும், இந்நிறுவனங்கள் மாணவா்களுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம் நிா்ணயித்துள்ளன.