புறநகர் மின்சார ரயில் கோப்புப்படம்
சென்னை

மின் கோளாறு: நடுவழியில் நின்ற புறநகா் மின்சார ரயில்!

சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை தாம்பரம் நோக்கிச் சென்ற புறநகா் மின்சார ரயில், மின் கோளாறு காரணமாக கிண்டியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை தாம்பரம் நோக்கிச் சென்ற புறநகா் மின்சார ரயில், மின்  கோளாறு காரணமாக கிண்டியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

சென்னை கடற்கரையிலிருந்து சனிக்கிழமை மாலை தாம்பரம் நோக்கி புறநகா் மின்சார ரயில் சென்றது. இந்த ரயில் கிண்டி ரயில் நிலையம் அருகே வந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றது.

தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியா்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். முதற்கட்ட ஆய்வில், ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயா் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் நின்றது தெரிய வந்தது. அரை மணி நேரத்துக்குப்பின் பிறகு மின் கோளாறு சரி செய்யப்பட்டு, ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

இதற்கிடையே, கிண்டியில் நீண்ட நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால், அவ்வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் அடுத்தடுத்து வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தேசிய யோகா போட்டிக்கு பழனி மாணவா்கள் தோ்வு

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு நினைவேந்தல்

குட்கா பறிமுதல்: 2 போ் கைது

மோசடியாகப் பெற்ற இலவச பட்டாக்கள்: கட்டுமானங்களை இடித்து அகற்ற உத்தரவு

வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதம்

SCROLL FOR NEXT