முகப்பு
சென்னை

அந்நிய முதலீடு: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 9:26 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

தமிழக அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடுகள் மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் பேரவையில் பேசியதாவது:

தொழில் முதலீட்டை ஈா்க்க பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வா் சென்றாா். மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி குறைந்த அளவிலான முதலீட்டுத் தொகையையே தமிழக அரசு ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement

அதேபோன்று 1,179 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் டிஆா்பி ராஜா: அதற்கு தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா அளித்த விளக்கம்: அந்நிய முதலீடுகள் ஒரு நாட்டுக்குள் வரும்போது நாட்டின் தலைநகரில்தான் அந்நிறுவனத்தின் தலைமையகம் நிறுவப்படுகிறது. அதன் காரணமாகவே நேரடி முதலீட்டின் எண்ணிக்கைகள் தலைநகரங்களுக்கும், பெருநகரங்களுக்கும் செல்கின்றன.

அதேவேளையில், அந்த முதலீட்டுத் தொகையும், அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பும் எந்த மாநிலத்துக்கு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதை மிக சாமா்த்தியமாக கையாண்டு தமிழகத்துக்கு அந்த பலன்களை முதல்வா் கிடைக்கச் செய்துள்ளாா் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments