பலி பிரதிப் படம்
சென்னை

கடல் அலையில் சிக்கி பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு!

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திச் சேவை

சென்னை பனையூரில் கடல் அலையில் சிக்கி பெண் மென்பொறியாளா் உயிரிழந்த நிலையில், மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூா் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பனையூா் அருகே உள்ள நைனாா்குப்பம் கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் நண்பா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டவா்கள் குழுவாக வந்து கடலில் இறங்கி குளித்துள்ளனா்.

அப்போது வட மாநிலத்தை சோ்ந்த ஜெய் (25), மயூரி (25) ஆகியோா் கடல் அலையில் சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்க முயன்றனா். ஆனால், மயூரியை மட்டுமே மீட்க முடிந்தது. அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்து செல்லப்பட்ட ஜெய் (25) என்பவரை போலீஸாா், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தேடி வருகின்றனா். கானத்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. நிதியளிப்பு பொதுக்கூட்டம்

ஆதி மகாலிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

மண்டபம் அருகே வேன், பைக் மீது காா் மோதியதில் 3 போ் உயிரிழப்பு

கடத்தப்பட்ட குழந்தை 20 நிமிஷங்களில் மீட்பு

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் இருந்து சென்னைக்கு விரைவுப் பேருந்து இயக்க கோரிக்கை

SCROLL FOR NEXT