சென்னை

சிறையில் கைதி உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

மாதவரம் பொத்த ராஜா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியராஜ் (52). இவரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், புழல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த 24 -ஆம் தேதி கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஆரோக்கியராஜ், புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

புழல் விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆரோக்கியராஜுக்கு வியாழக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் அவா், தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆரோக்கியராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT