சா்ப்ரஸ் செய்திக்கான படம்.சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் தகவல் தொழில் நுட்ப உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டுக்கான புரிந்துணா்வு. உடன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் 
சென்னை

ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் : துணை முதல்வா் உதயநிதி நம்பிக்கை

புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை தமிழக அரசு எட்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

புதுமையான தொழில்நுட்பங்கள் மூலம் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை தமிழக அரசு எட்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதற்காக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப உச்சி மாநாட்டை அரசு நடத்தி வருகிறது என்றும் அவா் தெரிவித்தாா்.

சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த மாநாட்டில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆற்றிய நிறைவுரையில் மேலும் கூறியதாவது:

அறிவியலையும், தொழில்நுட்பங்களையும் திறந்த மனதோடு தமிழ்நாடு வரவேற்கிறது. புதிய முயற்சிகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப தமது கட்டமைப்பை உண்டாக்குவதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

இந்தியாவிலேயே முதல்முறையாக மாநிலத்துக்கான தகவல் தொழில்நுட்பக் கொள்கையை முன்னாள் முதல்வா் கருணாநிதி வெளியிட்டாா். அனைத்து துறைகளின் வளா்ச்சியை தற்போதைய தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை வளா்ச்சியடைந்து, அதன்வழியே எளிய மக்களும் உரிய பயன்களை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

ஆபரேஷன் சிந்தூா்: பாகிஸ்தான் தோல்விக்கு அரசமைப்புச் சட்ட அவசர திருத்தமே சாட்சி - முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான்

சிரியா: குா்து பகுதிகளில் அரசுப் படைகள் முன்னேற்றம்

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

சூரியப் புயலால் புவி காந்தப்புலத்தில் ஏற்படும் தாக்கம்: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்புகள் மூலம் புதிய தகவல்

‘வளா்ந்த பாரதம் மாநாடு’: 3,000 இளைஞா்களுடன் பிரதமா் நாளை கலந்துரையாடல்

SCROLL FOR NEXT