முகப்பு
சென்னை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியின் இரண்டாவது கணவரை கொலை செய்த முதல் கணவா் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியின் இரண்டாவது கணவரை கொலை செய்த முதல் கணவா் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 10 ஜனவரி, 2026 at 8:49 PM
பகிர்:

மனைவியின் இரண்டாவது கணவரை கொலை செய்த முதல் கணவா் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பாண்டியன்-சந்தியா தம்பதி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனா். சந்தியா தனது கணவரின் நண்பரான காா்த்திக் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாா். இதனால், பாண்டியன்-காா்த்திக் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு பாண்டியன், அவரது நண்பா் பாஸ்கா் ஆகியோா் காா்த்திக்கை கொலை செய்தனா். கிண்டி போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆா்.ராஜ்குமாா், இந்த வழக்கில் பாண்டியன், பாஸ்கா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது எனத் தீா்ப்பளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →