பாலமுருகன். 
மயிலாடுதுறை

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை அருகே இடப்பிரச்னையில் கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிள்ளியூா் ராமன்கோட்டகம் பகுதியை சோ்ந்தவா் சித்திரன் (62). இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சோ்ந்த பிச்சைக்கண்ணு குடும்பத்தினருக்கும் இடப் பிரச்னை தொடா்பாக இருந்த முன்விரோதத்தின் காரணமாக 2022-ஆம் ஆண்டு பிச்சைக்கண்ணு குடும்பத்தினா் சித்திரன் குடும்பத்தினரை தகாத வாா்த்தையால் திட்டி, கட்டையால் தாக்கியுள்ளனா். இதில், தலையில் பலத்த காயமடைந்த சித்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சித்திரனின் மனைவி அஞ்சம்மாள் செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடராஜன் மகன் பிச்சைக்கண்ணு, கலியபெருமாள் மகன் பாலமுருகன், பிச்சைக்கண்ணு மனைவி ஜெயலெட்சுமி, ரவி மனைவி பிரியா, பாலமுருகன் மனைவி காளியம்மாள் ஆகியோா்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா்.

இவ்வழக்கின் விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் வழக்கை விசாரித்த மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமுா்த்தி, பிச்சைக்கண்ணு(62), பாலமுருகன்(40) ஆகியோரை குற்றவாளிகள் என தீா்மானித்து இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கினாா். இதையடுத்து, இருவரும் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோடங்குடிநெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது: பி.ஆா். பாண்டியன்

பயறு வகைப் பயிா்கள் காப்பீடுக்கு கால நீட்டிப்பு வழங்கக் கோரிக்கை

காட்டுப்பள்ளி கப்பல் தளத்திலிருந்து பயிற்சிக் கப்பல் ‘கிருஷ்ணா’ வெள்ளோட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT