முகப்பு
சென்னை

அரசு மருத்துவமனையில் கொலை: தலைவா்கள் கண்டனம்

அரசு மருத்துவனையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் கண்டனம்

Updated On : 12 ஜனவரி, 2026 at 8:19 PM
பகிர்:

அரசு மருத்துவனையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி: பொது மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவமனைகள் திமுக ஆட்சியில், உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியது.

சட்டம்-ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரோ, தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறாா். தமிழக காவல் துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட திமுக அரசு இதுவரை நியமிக்கவில்லை.

நயினாா் நாகேந்திரன்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரௌடி கொலை செய்யப்பட்ட சம்பவம் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவை அடிக்கோடிட்டு காட்டுகிறது. அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் பாதுகாப்பை அடியோடு பறித்துள்ளது திமுக அரசு. இதற்கு தோ்தல் காலத்தில் தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பாா்கள்.

ஜி.கே.வாசன்: தமிழ்நாட்டில் கொலைகள் தொடா்ந்து நடைபெறுவது தமிழக மக்களுக்கும் பாதுகாப்பானதல்ல, ஆட்சி அதிகாரத்தில் இருப்போருக்கும் நல்லதல்ல.

இதேபோல, அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன், தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →