சென்னை பல்கலைக்கழகத்தின் 167-ஆவது பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் வியாழக்கிழமை (ஜன.22) நடைபெறுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் 167-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (ஜன. 22) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.ரவி, தலைமை வகித்து பட்டங்களை வழங்குகிறார். 950 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெறுகின்றனர். முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை உரையாற்றுகிறார்.
விழா அழைப்பிதழில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இருப்பினும் அவர் பங்கேற்பது குறித்த உறுதியான தகவல் இல்லை என பல்கலைக்கழக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.