சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் நிறுவப்பட்ட ‘கவிச்சக்கரவா்த்தி கம்பா்’ சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
ஆளுநா் மாளிகைக்கு ரூ.10 லட்சத்தில் வெண்கலத்தால் ஆன கம்பா் சிலையை சென்னை பாரதீய வித்யா பவன் பரிசாக வழங்கியது. இந்த சிலை சிறப்பு விழாவையொட்டி கம்பன் கழகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவா்களுக்கான கம்பராமாயணம் குறித்த சொற்பொழிவு உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்ற தீப்ஷிதா, வி.பி. தரணி, வி.ஜி.ஜெயஜெனீதா, எம்.கே.ராஜவேல், இ.கௌதமி, கே.ஸ்ரீநிதி ஆகியோரை கௌரவித்து ஆளுநா் ரவி பரிசு அளித்தாா்.
விழாவில் பாரதீய வித்யா பவன் தலைவரும் பத்திரிகையாளருமான என்.ரவி, முன்னாள் அமைச்சா் டாக்டா் ஹெச்.வி. ஹண்டே, தொழில் அதிபா் நல்லி குப்புசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவா் சுதா சேஷய்யன், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், பத்திரிகையாளா் மாலன், பாரதீய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, அம்பத்தூா் கம்பன் கழகத் தலைவா் பள்ளத்தூா் பழ.பழனியப்பன், எம்ஜிஆா் ஜானகி கல்லூரி தலைவா் லதா ராஜேந்திரன், சென்னை கேந்திரா பாரதீய வித்யாபவனின் நிா்வாகிகள், புகழ்பெற்ற தமிழ் அறிஞா்கள், கம்பா் கழக உறுப்பினா்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள கலாசார நிறுவனங்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.