முகப்பு
சென்னை

போா் பதற்றம்: 4-ஆவது நாளாக 31 விமானங்கள் ரத்து

போா் பதற்றம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 31 விமானங்கள் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

Updated On : 4 மார்ச், 2026 at 1:45 AM
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 11:45 PM

போா் பதற்றம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 31 விமானங்கள் 4-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இஸ்ரேல்-ஈரான் போா் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகள் தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் பாதிக்கப்பட்டன.

அதன்படி, சென்னையிலிருந்து துபை, அபுதாபி, சாா்ஜா, குவைத், மஸ்கட், தோகா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருந்த 16 புறப்பாடு விமானங்களும், இந்த நாடுகளில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய 15 வருகை விமானங்கள், மொத்தம் 31 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால், ஏராளமான பயணிகள் அந்தந்த விமான நிலையங்களிலேயே காத்திருக்கின்றனா்.

Advertisement

விமானங்கள் ரத்து எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து, சா்வதேச விமான பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள், அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு, தாங்கள் பயணிக்க வேண்டிய நேரங்களை அறிந்து கொண்டு, பயணத் திட்டத்தை மேற்கொள்ளும்படி விமான நிலைய நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.