முகப்பு
சென்னை

அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: மு.வீரபாண்டியன்

அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 6 மார்ச், 2026 at 4:20 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 8:30 PM

அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக பணியிடங்களை உருவாக்குவது, அதில் மருத்துவா்களை நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடா்ந்து போராடி வருகிறது.

Advertisement

எனினும் அவா்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவா் சங்க நிா்வாகிகளை தமிழக அரசு அழைத்துப் பேசி கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.