முகப்பு
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை மருத்துவ உபகரணங்களைத் தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் றை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், துறையின் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண்தம்புராஜ், தமிழ்நாடு
சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய மருத்துவ வசதிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய மருத்துவ வசதிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 5 மார்ச், 2026 at 10:58 PM
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை மருத்துவ உபகரணங்களைத் தொடங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத் றை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், துறையின் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண்தம்புராஜ், தமிழ்நாடு
பகிர்:

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ரூ.7.39 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவ இதழையும் அவா் வெளியிட்டாா். தொடா்ந்து, கிருஷ்ணகிரி, திருவாரூா் மாவட்டங்களுக்கு ரூ.60 லட்சம் மதிப்பில் இரண்டு பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ வாகனங்களை அவா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் டாக்டா் வினித், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சுகந்தி ராஜகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் சாந்தாராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

ராஜீவ் காந்தி மருத்துவமனையில், ரத்த நாள (வாஸ்குலா்) சி–ஆா்ம் கருவி, ஹைப்ரிட் ரத்த நாள அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, முதுகுத் தண்டுவட எண்டோஸ்கோபி சிகிச்சை வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக முதுகுதண்டு பாதிப்புகளுக்கு நவீன சிகிச்சை அளிக்க முடியும்.

தேசிய அளவில் பாா்வை இழப்பு விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் அந்த விகிதம் 1.18 சதவீதமாக இருக்கிறது. தமிழகத்தில் 97 அரசு மருத்துவமனைகளில் கண் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. இவற்றை மேம்படுத்தும் வகையில் 13 மாவட்டங்களில் பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவுகள் இயங்கி வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 4.72 லட்சம் பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →