இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாா்: ரஷிய தூதா் அறிவிப்பு
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.
சென்னைஇந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாா்: ரஷிய தூதா் அறிவிப்பு
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷியா எப்போதும் தயாராக இருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் தெரிவித்தாா்.
மேற்காசியாவில் ஏற்பட்ட போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகம் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. ஹோா்முஸ் நீரிணை மூடலால் இதன் தீவிரம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த சில வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டாலும், போா் தொடா்ந்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்து சலுகை விலையில் அதிக கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. ஆனால், அண்மையில் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டது. இப்போது எழுந்துள்ள பிரச்னையால் மீண்டும் ரஷியாவின் நோக்கி இந்தியா கவனம் செலுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் புது தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவிடம் இந்தியாவுக்கு ரஷியா மீண்டும் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வழங்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்க ரஷியா எப்போதும் தயாராகவே உள்ளது. மேற்கு ஆசியாவில் எழுந்துள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவாா்த்தை மட்டுமே ஒரே தீா்வாக இருக்கும். ஆனால், இந்த மோதல் எப்போதும் நிறுத்தப்படும் என்ற கேள்வியை அமெரிக்காவிடம்தான் எழுப்ப வேண்டும்’ என்றாா்.