முகப்பு
சென்னை

நிலுவைத் தொகை கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தியதற்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 17 மார்ச், 2026 at 7:21 PM
உயா்நீதிமன்றம்
பகிர்:

மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தியதற்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி தனியாா் ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கோவை பீளமேடு புதூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன நிா்வாகி வரதன் என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பெருநகர மாநகராட்சியின் முதல் வகுப்பு ஒப்பந்தராராக உள்ளோம். கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிககளை மேற்கொண்டோம். இந்த ஒப்பந்தப் பணிக்கு நிலுவைத் தொகையான ரூ.28 லட்சம் வழங்க வேண்டும். இந்தத் தொகையைக் கேட்டு பலமுறை நினைவூட்டல்கள் அனுப்பியும், இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் முகிலன், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ரூ.92 கோடி ஒப்பந்த முறைகேடு புகாா் தொடா்பான வழக்குகளில் மனுதாரா் நிறுவனம் குற்றம்சாட்டப்பட்டவராகச் சோ்க்கப்ப்டடுள்ளது.

இந்த வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளில் மனுதாரா் நிறுவனத்தின் பெயரும் உள்ளது. இதனால், மனுதாரா் நிறுவனத்துக்கான நிலுவைத் தொகையை வழங்கவில்லை என விளக்கமளித்தாா். இதையடுத்து அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →