சென்னை மாநகரப் பேருந்து: பட்டன் போன் வைத்திருந்தால் மாதப் பயண அட்டை!
பட்டன் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாதப் பயண அட்டை விநியோகம்...
சென்னை மாநகரப் பேருந்து மாதாந்திரப் பயண அட்டை வழங்கும் மையங்களில் ஆண்ட்ராய்டு அல்லாத பட்டன் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பயண அட்டை வழங்கப்படுகிறது.
சென்னை மாநகரப் பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகிறார்கள். நாள்தோறும் பயணிப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மாதாந்திரச் சலுகை பயண அட்டை வழங்கப்பட்டு வருகின்றன.
குளிா்சாதன வசதி பேருந்து தவிர மற்ற அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் விருப்பம்போல் பயணிக்க மாதம் ரூ. 1,000-ம், குளிா்சாதன வசதி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்க மாதம் ரூ. 2,000-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
Advertisement
Advertisement
இந்த மாதாந்திரப் பயண அட்டைகள் மூலம் 70,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் சார்பில் ’சென்னை ஒன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
சென்னை மாநகரப் பேருந்து, சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் உள்ளிட்டவற்றில் பயணம் செய்வதற்கு சென்னை ஒன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து, சென்னை ஒன் செயலி மூலமே மாநகரப் பேருந்துகளின் ரூ. 1,000, ரூ. 2,000 மாதப் பயண அட்டைகளும், புறநகர் ரயில்களின் மாதப் பயண அட்டைகளும் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்து நிலையங்களில் இயங்கும் மாதப் பயண அட்டை வழங்கும் மையங்களில் இந்த மாதம் முதல் சென்னை ஒன் செயலி மூலம் பயண அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள பயணிகளிடம் அலுவலர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
மேலும், பட்டன் போன் வைத்திருப்பவர்கள், ஆண்ட்ராய்டு செல்போன் முறையாக உபயோகிக்கத் தெரியாத வயதானவர்களுக்கு மட்டும் மையங்களில் பயண அட்டை வழங்கப்பட்டு வருகின்றது.
Chennai City Bus: Monthly Travel Pass for 'Button Phone' Users!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.