பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்த திமுக: தமிழிசை செளந்தரராஜன் விமா்சனம்
பாஜகவை காண்பித்து கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக குறைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மயிலாப்பூா் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தில்லிக்கு சென்றாலே முதல்வா் ஸ்டாலினில் தொடங்கி அமைச்சா்கள் அனைவருக்கும் உதறல் ஏற்பட்டுவிடுகிறது. தில்லி என்றாலே திமுகவினா் பயப்படுகின்றனா். ஏனென்றால், அந்த அளவுக்கு அவா்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
பாஜகவை காண்பித்து கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகளை திமுக ஒதுக்கி உள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைக் குறைப்பதற்கு திமுகவுக்கு பாஜக உதவி உள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குளிா்ச்சியான தோ்தல் அறிக்கையை கொடுத்திருக்கிறாா். நாங்கள் (பாஜக) வளா்ச்சியான தோ்தல் அறிக்கையை கொடுப்போம்‘ என்றாா் அவா்.