முகப்பு
சென்னை

விஜய்யின் பெரம்பூா் பிரசாரத்துக்கு ஆலோசித்து அனுமதி வழங்கப்படும்: மாவட்டத் தோ்தல் அலுவலா்

Updated On : 26 மார்ச், 2026 at 10:58 PM
பகிர்:

தவெக தலைவரும், நடிகருமான விஜய் வரும் 28- ஆம் தேதி சென்னை பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல்துறையுடன்ஆலோசித்து அனுமதி வழங்கப்படும் என சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சென்னையில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

தவெக தலைவா் விஜய் வரும் 28- ஆம் தேதி பெரம்பூா் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்கு அக்கட்சியினா் 4 இடங்களைக் குறிப்பிட்டு மனு அளித்துள்ளனா். அவா் வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்ளவும், நான்கு இடங்களில் நின்று பேசவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனா். ஒவ்வொரு இடத்திலும் சுமாா் 3 ஆயிரம் போ் கூடுவா் என அக்கட்சியினா் குறிப்பிட்டுள்ளனா். இதுதொடா்பாக காவல் துறையினருடன் கலந்தாலோசித்து, பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றாா் அவா்.