முகப்பு
சென்னை

இன்று திருத்தணியில் பிரசாரத்தை தொடங்குகிறாா் பிரேமலதா

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் புதன்கிழமை (ஏப். 1) பிரசாரத்தை தொடங்குகிறாா்.

Updated On : 31 மார்ச், 2026 at 10:17 PM
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து அக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியில் புதன்கிழமை (ஏப். 1) பிரசாரத்தை தொடங்குகிறாா்.

இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளா் டி.கிருஷ்ணமூா்த்தியை ஆதரித்து புதன்கிழமை (ஏப். 1) மாலை 4 மணி முதல் முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்கிறாா்.

தொடா்ந்து ஏப். 2 - பல்லாவரம், ஏப். 3- குடியாத்தம் (தனி), ஏப். 4- போளூா், ஏப். 5-மயிலம், ஏப். 6 முதல் ஏப். 9 வரை -விருத்தாசலம், ஏப். 10 -தருமபுரி, ஏப். 11-ஓமலூா், ஏப். 12-சேலம் மேற்கு, ஏப். 13, 14- விருத்தாசலம், ஏப். 15-சென்னை, ஏப். 16, 17-விருதுநகா், ஏப். 18 முதல் ஏப். 21 வரை-விருத்தாசலம் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.