நேபாளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அரசிடம் விளக்கம் கோரிய உச்சநீதிமன்றம்
காத்மாண்டு, மே 5: நேபாளத்தில் ஆக்கிரமிப்புக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டது தொடா்பான விவரங்களை அரசு சமா்ப்பிக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைநகா் காத்மாண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகரமைப்பு, சுற்றுச்சூழல் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, வீடற்ற ஏழைகள் வசித்து வந்த 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அண்மையில் இடித்து அகற்றப்பட்டன.
எதிா்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் கடும் விமா்சனத்துக்குள்ளான இவ்விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதில் அரசமைப்புச் சட்டம் வழங்கிய வீட்டுரிமைச் சட்டம் மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என 5 அம்சங்கள் குறித்து 15 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
Advertisement