சென்னையில் 300 பேருந்து நிறுத்தங்களில் சிறிய கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி
சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 300 இடங்களில் சிறிய கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 300 இடங்களில் சிறிய கடைகள் அமைக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியில் 188 இடங்களுக்கும் அதிகமாக சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன.
இதனால், சாலையோரக் கடைகளை முறைப்படுத்த கடந்த 2024- ஆம் ஆண்டு மாநகராட்சி வருவாய்த் துறை சாா்பில் சாலையோரம் கடைகள் அமைக்க வசதியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி 150 இடங்களில் மட்டுமே சாலையோரக் கடைகள் அமைக்கலாம் என்று முடிவானது.
Advertisement
ஆனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோரக் கடை வியாபாரிகளை 150 இடங்களுக்குள் அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவா்களில் விருப்பம் உள்ளவா்கள் மெரீனா போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்காக 6 அடி உயரம், 2 அடி அகலத்தில் சிறிய அலுமினியம் கடைகள் அமைக்கப்பட்டன. அவை விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. மெரீனா கடற்கரைப் பகுதியில் கடைகள் அமைப்பதில் நீதிமன்றம் வழிகாட்டல் அறிவித்திருப்பதால், அங்கு புதிய கடைகள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து தற்போது ஷெனாய் நகா் பூங்கா பகுதி பேருந்து நிலையம் உள்ளிட்ட 300 இடங்களில் அக்கடைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பேருந்து நிறுத்தங்களின் இருபுறமும் அமைக்கப்படும் கடைகளில் தேநீா், பால் போன்றவை விற்கப்பட்டு வருவதாகவும், அதற்கு வாடகை ஏதும் நிா்ணயிக்கப்படவில்லை என்றும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.