முகப்பு
சென்னை

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

சென்னையில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறித்து...

அமலாக்கத் துறை - சித்திரிப்பு படம்
பகிர்:

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்பிஐ வங்கியில் ரூ. 300 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் ஃபைனான்சியர் குல்னஸ் பேகம் வீடு உள்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், அண்ணா நகரில் லஷ்மணசாமி என்பவரது வீடு, அவரது மைத்துனர் கிருஷ்ணமூர்த்தி வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தல், சட்டவிரோத பணபரிவர்த்தனை உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது

அமலாக்கத் துறையினரின் சோதனை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

summary

Enforcement Directorate officials are conducting raids at 10 locations in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.