காஞ்சிபுரம்

மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளிக்கு நாட்டு நலத்திட்ட இளம் தலைவர் விருது

DIN

சிறந்த பணிக்காக மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளிக்கு நாட்டு நலத்திட்ட இளம் தலைவர் விருது வழங்கும் அண்மையில் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த 2015-2016-ஆம் ஆண்டு கல்வி ஆண்டு நாட்டு நலத் திட்டப் பணியில் சிறந்து விளங்கியதற்காக 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் 2-வது பள்ளியாக மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளி நாட்டுநலத் திட்ட சேவைப்பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் இளங்கோவன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன், இந்து மேல்நிலைப் பள்ளி நாட்டு நலத் திட்ட அலுவலர் டி.குமாரிடம் சான்றிதழ், ரொக்க பணம் ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாட்டு நலத்திட்ட மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, இந்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடபெருமாள், நாட்டு நலத்திட்ட தொடர்பு அலுவலர் தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் செல்வகுமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT