காஞ்சிபுரம்

விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 12-ஆவது ஆண்டாக 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.
இப் பள்ளியில் மொத்தம் 144 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியிருந்தனர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
மாணவி யூ.அனு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் கே.ரோகித் 490 மதிப்பெண்களை பெற்று 2-ஆவது இடத்தையும், மாணவி ஏ.மெகர் நிஷா 489 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பெற்றனர்.
கணிதப் பாடத்தில் 8 பேரும், அறிவியல் பாடத்தில் 4 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 26 பேரும் 100க்கு 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் பள்ளித் தாளாளர் டி.லோகராஜ் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT