பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு துணைப் பதிவாளர் அருள் அரசு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு மேலாண்மை 2017-18-ஆம் ஆண்டிற்கான பட்டயப் பயிற்சி ஜூலை 14 முதல் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2017 ஜூலை 1-ஆம் தேதி 17 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சி 36 வாரங்கள் நடைபெறும். ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சிக்கு ரூ.13,800 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள நபர்கள் இதற்கான விண்ணப்பங்களை பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண், 6, வந்தவாசி சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் விவரங்களுக்கு, 044-27237699 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.