காஞ்சிபுரம்

கழுத்தை அறுத்து பெயிண்டர் கொலை

DIN

சுங்குவார்சத்திரம் அருகே கழுத்தை அறுத்து பெயிண்டர் கொலை செய்யப்பட்டார்.
பூந்தமல்லியை அடுத்த திருமழிசைப் பகுதியைச் சேர்ந்தவர் பென்னி (46). இவர் மொளச்சூர் பகுதியில், தனியாக தங்கியிருந்து பெயிண்டராக வேலைபார்த்து வந்துள்ளார். பென்னி மொளச்சூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்
கூடத்தின் அருகே இரவு நேரத்தில் தினமும் மது அருந்திவிட்டு தூங்குவது வழக்கம் என்கின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சமுதாய நலக்கூடத்தின் அருகில் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சுங்குவார்சத்திரம் போலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து பென்னியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT